வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கு வசதி – 2023 முதல் புதிய நடைமுறை என குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு!

Friday, December 30th, 2022

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வருகை அட்டைகள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் புறப்பாடு அட்டைகள் புதிய முறையின் மூலம் சரிபார்க்கப்படும்.

எனவே, இரண்டு விமானப் பயணிகளும் தங்கள் பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தங்கள் அட்டைகளை ஒன்லைனில் நிரப்ப முடியும்.

திணைக்களம் பயணிகளை www.immigration.gov.lk அல்லது https://eservices.immigration.gov.lk என்ற திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு ஊடாகப் பார்வையிடுமாறு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், பயணிகள் குடிவரவு மற்றும் குடியகல்வு நடைமுறைகளை எந்தவித அசௌகரியமும் இன்றி நிறைவு செய்ய முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: