வாக்கு மூலம் வழங்க வருமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு CID அழைப்பு!
Tuesday, July 2nd, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இன்று வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
எனினும் தாம் எதிர்வரும் 8ம் திகதியே அதில் முன்னிலையாகவிருப்பதாக ஹேமசிறி பெர்ணாண்டோ எமது செய்தி சேவையிடம் தெரிவித்தார்.
தற்போது இருதய சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தம்மால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிரசன்னமாகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
வித்தியா கொலை: ஏழுபேருக்கு மரணதண்டனை!
செல்வச் சந்நிதியானுக்கு நாளை கொடி!
ஜப்பான் நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி அடுத்தவாரம் இலங்கை வருகை!
|
|
|


