இத்தாலி சென்றார் ஜனாதிபதி!

Saturday, July 14th, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத்தாலிக்க விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ரோமில் இடம்பெறுகிற உலக வன பாதுகாப்பு குழுவின் 24வது அமர்வு மற்றும் 6வது உலக வனவள வாரம் ஆகியவற்றில் பங்கு கொள்வதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி இன்று மதியம் ரோம் நோக்கி புறப்பட்டார்

அங்கு செல்லும் ஜனாதிபதி பலதரப்பட்ட அரசியல் தலைவர்களுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: