இடிந்து விழுந்தது ஊர்காவற்துறை இறங்கு துறை – பாதுகாப்பானதுமான போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு பயணிகள் கோரிக்கை!
Tuesday, March 21st, 2023காரைநகர் – ஊர்காவற்றுறை இடையே பயணிகள் கடல் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் படகுகள் கரையொதுங்கும் ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்துள்ளது.
இத்துறைமுகம் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த நிலையில் தம்மிடம் நிதி இல்லையெனக் கூறிய வீதி அபிவிருத்தி அதிகார சபை இதைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் குறித்த இறங்குதுறை இடிந்து விழுந்துள்ளது. அதனால் படகு சேவையில் பயணிக்கும் பயணிகள் இடிந்து விழுந்துள்ள இறங்குதுறையில் ஆபத்தான நிலையில் நின்றே படகுகளில் ஏறி பயணத்தை மேற்கொள்கின்றனர்.
எனவே விரைவாக இதைத் திருத்தம் செய்து தமது சீரானதும் பாதுகாப்பானதுமான போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்!
அவசரகால சட்ட விதிமுறைகள் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
பல இலட்சம் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாட நளினிக்கு எங்கிருந்த பணம் வந்தது? - 31 ஆண்டுகள...
|
|