ஆயுதம் இருப்பதாக சந்தேகம் : புலோலியில் இராணுவம் தேடுதல் நடவடிக்கை!
Monday, November 13th, 2017
வடமராட்சி – புலோலி பகுதியில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இராணுவத்தினர் கனரக வாகனங்கள் சகிதம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
புலோலி உபயகதிர்காமம் பகுதியில் புலிகளின் கடற்புலித் தளம் இருந்த இடத்திலேயே குறித்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
முன்னதாக, புலிகளின் கடற்படைக்கு சொந்தமான கடற்புறா தளம் இருந்து இந்த பகுதியில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிக்கடையில் கனரக வாகஙக்களின் உதவியுடன் பெருந்தொகையான இராணுவத்தினர் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
எச்சரிக்கை: தென்கிழக்கு ஆசியாவில் புதுவகை மலேரியா!
தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி!
உயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர், மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் சத்தியப்பிரமாணம்!
|
|