ஆதரவுக் கரம் கொடுத்தது ஈ.பி.டி.பி.: வலிகாமம் மேற்கு பிரதேச சபையையும் வென்றெடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

Wednesday, March 28th, 2018

வலிகாமம் மேற்கு பிரதேச (சுழிபுரம்) சபைக்கான தவிசாளர் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களைப் பெறாத நிலையில் குறித்த சபையின் ஆட்சி பொறுப்பை அமைக்க அந்தந்தப் பிரதேசங்களில் அதிக ஆசனங்களை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய முன்னணியும் உரிமை கோரியிருந்த நிலையில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் தெரிவு நடைபெற்றது.
இதன் அடிப்படையில் குறித்த சபைக்கான பலப்பரீட்சை இன்று பிற்பகல் நடைபெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
25 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த நகரசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 9 ஆசனங்கள்இதமிழ் தேசிய மன்னணி 6 அசனங்கள்இ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 4 ஆசனங்கள் மற்றும் இதர கட்சிகள் 6 உறுப்பினர்கள் என பெற்றிருந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்ற குறித்த சபைக்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெளிப்படையான ஆதரவை வழங்கிய நிலையில் குறித்த சபைக்கான ஆட்சி அதிகாரத்ததை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிகொண்டுள்ளது.
இந்நிலையில் மற்றொரு சபையாக காரைநகர் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: