ஆசிரியர்களுக்கு 3 வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித் திட்டம்!

Thursday, April 22nd, 2021

ஆசிரியர்களுக்கான மூன்று வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையும் தேசிய கல்வியியல் கல்லூரிகளும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சுற்றாடல் குறித்த அறிவை வழங்குவதே இதன் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ்.அமரசிங்க தலைமையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் இன்றுகாலை 9.30 அளவில் சுற்றாடல் அதிகார சபையில் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: