அழிவடைந்த சோள அறுவடையை கொள்வனவு செய்ய நடவடிக்கை!
Monday, February 18th, 2019சேனாபடைப்புழுவினால் அழிவடைந்த சோள அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கு, கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கால்நடைகளுக்கு உணவாக வழங்கும் நோக்கில் இந்த சோளம் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
அடுத்த வாரமளவில் இதற்கான விலை நிர்ணயிக்கப்படும் எனவும், தமது திட்டம் குறித்து விவசாயத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், டொக்டர் நிஹால் வெதசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களிலும் படைப்புழுவினால் சோளச் செய்கைக்கு பாதிப்பு ஏற்படுமாயின், அழிவடையும் சோளத்தை கால்நடைகளுக்கு வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
துறைமுக நகர நிர்மாண பணிகளில் சிங்கப்பூர் நிறுவனம்?
பல்கலைக்கு தெரிவான மாணவி தூக்கிட்டு தற்கொலை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சகோதரர் தயானந்தா அவர்களின் மாமியார் காலமானார்!
|
|