அரியாலை சூட்டு சம்பவம்: படுகாயமடைந்த இளைஞன் பலி!

Sunday, October 22nd, 2017

இன்று பிற்பகல் அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் பா. சத்திய மூர்த்தி உறுதி செய்துள்ளார்.

அரியாலை உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் எனும் இளைஞர் மீது இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தற்போது யாழ்.போதனா வைத்தியசாலை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நீக்கப்படலாம் – நாளை இறுதி முடிவு எட்ட...
பாடசாலைகளை மீண்டும் திறக்க ஆசிரியர்களின் ஆதரவு அவசியம் – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே வலியுறுத்து...
நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் வழங்கப்படமாட்டாது என்ற செய்தி பொய்யானது ...