அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – நிதி அமைச்சர்!

Monday, February 13th, 2017
அரிசி விற்பனை நிலைமை குறித்து ஆராய நாட்டின் பல பகுதிகளுக்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.

சிலாபத்தில்  நேற்று இடம்பெற்ற நிகழ்விலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அங்கு குறிப்பிட்டார்.

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான விசேட தீர்வொன்று விரைவில் வழங்கப்படும் அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கிய அனுகூலங்கள் உரிய முறையில் பொதுமக்களை சென்றடையாவிட்டால் அது விடயத்தில் அரசாங்கம் தலையிட நேரிடும் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

c5ab99bdcebe5f31e1bcecf6a2839034_XL

Related posts:

பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் - ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து விசேட கட...
பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள...
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்த...