அரச துறையினரின் போராட்டங்கள் அதிகரித்து அரசாங்கத்தின் வருமானம் குறைந்தால், தன்னிச்சையாகவே அரச துறையினரின் சம்பளம் குறையும் – அரசாங்கம் அறிவிப்பு!
Thursday, July 11th, 2024
அரச துறையினரின் போராட்டங்கள் அதிகரித்து, அதனால் அரசாங்கத்தின் வருமானம் குறைந்தால், தன்னிச்சையாகவே அரச துறையினரின் சம்பளம் குறையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இப்போது ஆர்ப்பாட்டம் நடத்துகின்ற தரப்புக்கு ஆதரவான குழுக்கள் ஆட்சியைப் பிடித்தாலும், நாட்டை 2 வாரங்களுக்கு மேல் நடத்திச் செல்ல முடியாது.
முன்னைய அரசாங்கங்களைப் போல இப்போது பணத்தை அச்சிட முடியாது. அதனை மீறி அச்சிட்டால் ஏனைய நாடுகள் இலங்கையைக் கைவிட்டுவிடும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன் கூறுியுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!
இலங்கையில் இதுவரை 13 மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது - ஆபத்து தொடர்பில் சுதத் சமரவீர எச்சரிக்கை!
பாடசாலைகளை மீள திறப்பதற்கு முன்னர் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கல்வியமைச்சு அறிவிப்...
|
|
|


