அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!
Friday, April 7th, 2023அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர பெயரிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சித்தி மரீனா மொஹமட், நரசிங்க ஹேரத் முதியன்சலாகே சித்ரானந்த, பேராசிரியர் நாகநாதன் செல்வகுமாரன், மானிக்க படதுருகே ரோஹன புஷ்பகுமார, கலாநிதி. அங்கம்பொதி தமித நந்தனி டீ சொய்ஷா, ரஞ்சினி நடராஜபிள்ளை மற்றும் பல்லேகம சந்திரரத்னே பல்லேகம ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பு சபையின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரச சேவைகள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி புதிய குழு!
வடக்குகிழக்கில் போலிநியமனம் குறித்து விசாரணைக்கு உத்தரவு!
மக்களின் நம்பிக்கையை இழக்கும் காவல்துறை - ஒழுக்கம் பேணவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலி...
|
|