அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் – பெப்பரல் !
Sunday, September 22nd, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகளின் வாக்குகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என பெப்பரல் அமைப்பு வலியுறுத்துவதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பிரதான அரசியல் கட்சிகளுக்கு மேலதிகமாக இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 17 அரசியல் குழுக்கள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக வாக்குகள் சிதறடிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக உரிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வதற்கான வாய்ப்பு இல்லாது போகும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இ. போ.சபைக்கு சொந்தமான பழைய பேருந்துகளை மீள்பாவனைக்கு உட்படுத்த தீர்மானம்!
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை விசேட கலந்துரையாடல்!
மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்களும் எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்படும்!
|
|
|


