இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கையில் முதலீடு செய்ய இந்தியா தயார் – இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு!
Thursday, February 24th, 2022இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கையில் முதலீடு செய்ய தயாராக உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இணையவழி கலந்துரையாடலின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இலங்கையின் நிதி நெருக்கடிக்கு தீர்வை காண்பது தொடர்பில் இருநாடுகளிற்கும் மத்தியில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் உட்பட ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா கடன் உதவிகளை வழங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாகிஸ்தான் குடும்பத்தை நாடு கடத்த வேண்டாம் - இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை!
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் "சுகம் பேணும் நிலையம்" வட்டுக்கோட்டையில் திறப்பு!
யாழ்ப்பாண சிறைச்சாலையில் "காத்திருப்போர் மண்டபம்" திறந்து வைப்பு!
|
|