அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!
Friday, April 7th, 2023
அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர பெயரிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சித்தி மரீனா மொஹமட், நரசிங்க ஹேரத் முதியன்சலாகே சித்ரானந்த, பேராசிரியர் நாகநாதன் செல்வகுமாரன், மானிக்க படதுருகே ரோஹன புஷ்பகுமார, கலாநிதி. அங்கம்பொதி தமித நந்தனி டீ சொய்ஷா, ரஞ்சினி நடராஜபிள்ளை மற்றும் பல்லேகம சந்திரரத்னே பல்லேகம ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பு சபையின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரச சேவைகள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட வெற்றுக் காணிகளிலுள்ள பற்றைகளை வெட்டி அகற்றுமாறு அறிவுறுத்தல்!
கிளிநொச்சியில் ஆர்பிஜி செல்கள் மீட்பு!
ஐந்து மாதங்களில் 53 வீத நிலுவைத் பில்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் ...
|
|
|


