கிளிநொச்சியில் ஆர்பிஜி செல்கள் மீட்பு!
Friday, September 16th, 2016
கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்பிஜி செல்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்வம் தொடர்பாகத் தெரிய வருவதாவது நேற்று பிற்பகல் ஆறு முப்பது மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்பிஜி ரக செல்கள் மீட்கப்பட்டுள்ளது
இருப்பினும் இன்றையதினம் காலையே குறித்த காணியினுள் வேலைசெய்கின்ற ஒப்பந்தகாரரினால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் அத்துடன் மீட்கப்பட்ட ஒன்பது ஆர்பிஜி ரக செல்களும் பாவனைக்கு உதவாத நிலையில் இருப்பதாக கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்வது எப்படி?
எட்டு இலட்சம் பெறுமதியான இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார கார் !
தூங்குவது போல விளையாட்டு காட்டிய ஆசிரியரின் உயிர் பிரிந்தது!
|
|