அரசியல் இலாபம் தேடவேண்டாம்! – அரசியல் கட்சிகளிடம் அரசாங்கம் கோரிக்கை!

Monday, June 6th, 2016
நேற்றையதினம் அவிசாவளை கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை வைத்து எந்தவொரு அரசியல் கட்சிகளும் அரசியல் இலாபம் தேடக் கூடாது என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனரட்ன –

இலங்கையில் மாத்திரமல்ல உலக நாடுகளில் உள்ள இராணுவ முகாம்களிலும் இதுபோன்று வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அண்மையில் இந்தியாவிலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

எனவே அரசியல் கட்சிகள் இந்த சம்பவத்தை அரசியலாக்காமல் இருப்பதோடு அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும் தவிர்த்து கொள்ள வேண்டும்.

மேலும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

Related posts:

சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் தகைமை தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளது - வெளிவிவகார அமைச்சர் ...
அமைச்சர் டக்ளஸின் வரலாறு மக்களுடன் பின்னிப் பிணைந்து இருக்கின்றது – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வ...
கடற்றொழிலாளர் வாழ்வு மேம்பட வருமானங்களை முதலீடாக்கும் பொறிமுறை அவசியம் - கிளிநொச்சி மாவட்ட ஒருங்கி...