லெபனானில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது!

Sunday, October 22nd, 2023

லெபனானில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உயிரிழந்த பெண் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பிரேமலதா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

லெபனானில் குடியிருப்போன்று இடிந்து விழுந்ததை அடுத்து இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்தவர்களில் இலங்கை பெண் ஒருவரும் அடங்குவதாக பெய்ருட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் கடந்த 17 ஆம் திகதி உறுதிப்படுத்தியது.

லெபனான் – மன்சூரியில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று கடந்த 16 ஆம் திகதி இடிந்து விழுந்தது.

கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் வெள்ளம் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக லெபனான் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: