அரசியலமைப்பு தெரியாமல் பலர் கருத்து கூறுகின்றனர் – பிரதமர் !

Monday, October 23rd, 2017

புதிய அரசியலமைப்பு தொடர்பில் தெரியாத நிலையிலேயே சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை கவனமாக வாசித்து விவாதத்துக்கு முன்னர் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, அரசியலமைப்பின் முன்னேற்றத்தை அச்சு ஊடகங்கள் தடுப்பதாகவும் பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts: