அமைச்சர் டக்ளஸ் முயற்சி – துரிதகதியில் முன்னெடுக்கப்படும் இணுவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கான சமிக்ஞை விளக்கு பொருத்தும் பணிகள்!

Saturday, March 2nd, 2024

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியை அடுத்து இணுவில் பகுதியில் காணப்படும் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கான சமிக்ஞை விளக்கு பொருத்தும் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

அண்மையில் இணுவில் கிழக்கு காரைக்கால் பகுதி பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரடி கள விஜயம் மேற்கொண்டு நிலமைகளை ஆராய்ந்த யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சமிக்ஞை விளக்கின் அவசியம் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியிருந்ததுடன் அதற்கான பணிகளை துரிதமாக முன்னெடுக்கமாறும் வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன் குறித்த பகுதியில் சமிக்ஞை விளக்க பொருத்தும்வரை தனது கட்சியின் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து இரு இளைஞர்களையும் காவற்கடமைக்கு அமர்த்தி அனர்த்தங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கான தற்காலிக ஏற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில் புதிய பாதுகாப்பு சமிக்ஞை விளக்கு குறித்த பகுதியில் பொருத்தும் நடவடிக்கைகள் துரிதாமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் வேலைத்திட்டங்கள் நிறைவுறும் கட்டத்திற்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: