மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

Wednesday, March 17th, 2021

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

இதற்கமைய, மாகாண சபைத் தேர்தலுக்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு, இதன்போது  இணக்கம் வெளியிடப்பப்பட்டதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: