தனித்தனியே நின்று கட்சி அரசியல் செய்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது – ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துங்கள் – தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பிரதமர் ஆலோசனை!

Wednesday, November 29th, 2023

வெளியில் தனித்தனியே நின்று கட்சி அரசியல் செய்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது என தேசியத்தின் பெயரால் அரசியல் மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அவரின் கரங்களைப் பலப்படுத்தி அரசியல் தீர்வை விரைவாக வென்றெடுக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சம்பந்தனையும் அவரின் கட்சியையும் நாங்கள் மதிக்கின்றோம். அதேபோன்று கஜேந்திரகுமாரையும் அவரின் கட்சியையும் மதிக்கின்றோம். விக்னேஸ்வரனையும் அவரின் கட்சியையும் மதிக்கின்றோம். ஆனால், இந்த மூன்று தரப்பினரும் வெளியில் இருந்துகொண்டு அரசியல் தீர்வு வேண்டும் என்று கோருகின்றார்கள்.

அவர்கள் அனைவரும் ஜனாதிபதியுடன் இணைந்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தினால் தீர்வை விரைவில் வென்றெடுக்க முடியும். அவர்கள் வெளியில் தனித்தனியே நின்று கட்சி அரசியல் செய்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது.

தீர்வை வென்றெடுக்கத் கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பத்தைத் தமிழ்க் கட்சிகள் தவறவிடக்கூடாது” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: