அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – வெலிஓயா மீனவர்களின் நீண்டகால பிரச்சினையான மீனவர் சங்க நிர்வாக தெரிவுக்கு சுமுகமாக தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Sunday, March 24th, 2024

முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பகுதியில் உள்ள மீனவர்களின் நீண்டகால பிரச்சினையான மீனவர் சங்க நிர்வாக தெரிவு நடைபெறுவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

குறித்த மீனவர் சங்க நிர்வாக தெரிவு தொடர்பான பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்.கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவரது துரித நடவடிக்கை காரணமாக சுமுகமாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அங்குள்ள பௌத்தமதகுருமார்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் முல்லைத்தீவு மாவட்ட பணிப்பாளர் உள்ளிட்டவர்களை இணைத்து சந்திப்பினை மேற்கொண்டு ஆராய்ந்ததுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  ஆலோசனைகளையும் உள்ளடக்கி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டடுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: