அமைச்சரானார் வியாழேந்திரன்: பிளவுபட்டது கூட்டமைப்பு!

Saturday, November 3rd, 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். குறித்த பதவியேற்பு இன்று மாலை நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதனிடையே “நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்” என கருணா அம்மான்  தனது டுவிட்டர் தளத்தில் தமிழில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: