மானிப்பாய் பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட 16 ஊழியர்கள் பதவியேற்பு!

Monday, April 2nd, 2018

மானிப்பாய் பிரதேச சபைக்கு நியமிக்கப்பட்ட 16 ஊழியர்கள் இன்று கடமை ஏற்கவுள்ளனர் என மானிப்பாய் பிரதேச சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

மானிப்பாய் பிரதேச சபைக்கான வேலை வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களை பத்திரிகை மூலமாக கோரியிருந்தோம். அதன்மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை நேர்முக சபையால் பரிசீலிக்கப்பட்டு அவர்களின் முடிவின் அடிப்படையில் நேர்காணலின் மூலம் தற்போது 16 ஊழியர்களைத் தெரிவு செய்துள்ளோம். அந்தவகையில் வெளிக்களத் தொழிலாளிகள் 9 பேரும் சுகாதார தொழிலாளிகள் 4 பேரும் நூலக சேவகர் ஒருவரும் காவலாளிகள் இருவரும் என 16 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நியமனக் கடிதங்களும் பதிவுத் தபால் மூலமாக அனுப்பிவிட்டோம். அதனடிப்படையில் இன்று காலை பிரதேச சபையில் ஊழியர்கள் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts: