அமைச்சரவையில் கையடக்க தொலைபேசிக்கு தடை!
Wednesday, March 13th, 2019
அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லும் அமைச்சர்கள் கையடக்க தொலைபேசிகளை கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நேற்று(12) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியினால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது
அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சர்கள் கையடக்க தொலைபேசிகளில் அழைப்பு மேற்கொண்டதுடன், அழைப்புகளுக்கு பதில் வழங்கியமையினால் ஜனாதிபதியினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!
இந்த ஆண்டு தேர்தல் இல்லை - ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவிப்பு!
இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்...
|
|
|


