இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை !
இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உரிய நேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம். இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய தேர்தல்களும் இடம்பெறும். இந்த விடயங்கள் அனைத்தும் மக்களிற்கான குரல்களை வழங்கும், அவர்கள் வாக்களிப்பின் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிடமுடியும், தங்கள் தலைமையை தெரிவு செய்ய முடியும்.
அடுத்த வருடம் நடைபெற வேண்டிய தேர்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம், சுதந்திரமான நியாயமான தேர்தல் இடம்பெறுவதை எதிர்பார்த்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
பல்கலைக்கழகங்கில் இந்து மதத்திற்கு மட்டுமே தனியான பீடம் கிடையாது - பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை !
சுகாதார தொண்டா் நியமனத்தில் மோசடி - விசாரணைக்கு உத்தரவு!
ஜனாதிபதி பணிப்புரை - பாம் எண்ணெய் இறக்குமதி முழுமையாக தடை!
|
|
|


