இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை !

Thursday, November 9th, 2023

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உரிய நேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம். இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய தேர்தல்களும் இடம்பெறும். இந்த விடயங்கள் அனைத்தும் மக்களிற்கான குரல்களை வழங்கும், அவர்கள் வாக்களிப்பின் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிடமுடியும், தங்கள் தலைமையை தெரிவு செய்ய முடியும்.

அடுத்த வருடம் நடைபெற வேண்டிய தேர்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம், சுதந்திரமான நியாயமான தேர்தல் இடம்பெறுவதை எதிர்பார்த்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:

நாட்டின் ஜனாதிபதியாவதே எனது இலட்சியம் - புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ம...
இலங்கை வந்தடைந்தது சீனாவின் சினோபாம் - நேரடியாக சென்று பெற்றுக்கொண்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
2017 மற்றும் 2019 விட ஜனவரி மாதத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் -வைத்தியர் சுதத் சமரவீர...