வடக்கின் அரச சித்த மருத்துவர்கள்- பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம்!

Saturday, November 19th, 2016

சுதேச வைத்தியர்களின் நியமனங்களின் போது தாம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து வட மாகாண அரச சித்த மருத்துவர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ மாணவர்கள் இணைந்து நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை கைதடி முன்றலில் நண்பகல் வேளையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமானது.சுமார் 300ற்கும் மேற்பட்ட யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ மாணவர்கள் மற்றும் வட மாகாண அரச சித்த மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்

கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர்.தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளரிடம் வழங்கிய பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

protest-4

Related posts: