அமெரிக்கா புறப்பட்டார் ஜனாதிபதி.!
Sunday, September 18th, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10.45 மணியளவில் ஜிகே 651 விமானத்தினூடாக நியூயோர்க் பயணமானார்.
இந்த அமர்வு அமெரிக்க ஐனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் நாளை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பதவி காலம் முடிவடைகின்ற நிலையில், அவரது இறுதி பொதுச்சபை கூட்டம் என்பதால் அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இதன்போது கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts:
பரீட்சாத்திகளின் உரிய நேர வருகையின்மையால் ஒழுங்கமைப்பில் சிரமம் - மோட்டார் போக்குவரத்துத்திணைக்கள ஆண...
தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்கு புதிய நடைமுறை அறிமுகம்!
வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் உலக நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கோப...
|
|
|


