அமரர் அமிர்தலிங்கத்தின் உருவச் சிலைக்கு ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை!
Friday, July 13th, 2018இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்தவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 29 ஆவது நினைவு தினம் இன்று வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான சிவகுரு பாலகிருஷ்ணன் அன்னாரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
வலிகாமம் மேற்கு சுழிபுரத்தில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு இன்றையதினம் இடம்பெற்ற 29 ஆவது நினைவு தின அனுஷ்டிப்ப இடம்பெற்றது. இதன்போது உருவச்சிலைக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் வரலாற்றில் ஒரே தடவையில் நான்கு பெரிய கப்பல்கள்!
யாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கும் உரிமை உண்டு - யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் வலியுறுத்து!
அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
|
|