அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Tuesday, June 25th, 2024
அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் இரு போகங்களுக்கும் உரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க 55,000 மெட்ரிக் டன் உரம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
உர விநியோகம் போன்ற நடவடிக்கைகளுக்காக சுமார் ஒன்றரை பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் அத்தொகையை அரசாங்கம் ஏற்க நடவடிக்கை எடுக்குமெனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் ஓய்வூதியம் தொடர்பில் ஜனாதிபதி அவதானம் !
மிக அவசர தேவையை தவிர ஏனையவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் - ஜனாதிப...
அபாய இடர் வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம்!
|
|
|


