அனைத்து மருத்துவமனைகளையும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பணிப்பு!

Wednesday, October 25th, 2023

அனைத்து மருத்துவமனைகளையும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய எல் நினோ எனப்படும் வளிமண்டல சுழற்சி மாற்றங்கள் காரணமாக டெங்கு உள்ளிட்ட தொற்றுகள் அதிகரிக்கக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளதோடு அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: