அத்தியவசிய சேவை ஊழியர்களுக்காக விசேட ரயில் சேவை – ரயில் போக்குவரத்து அத்தியட்சிகர் தெரிவிப்பு!

Thursday, May 13th, 2021

அத்தியவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மாத்திரம் இன்றுமுதல் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த ரயிலில் வேறு நபர்களுக்கு பயணிக்க முடியாது என ரயில் போக்குவரத்து அத்தியட்சிகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தியவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்காக கண்டி, மஹவ, இறம்புக்கனை, சிலாபம் மற்றும் பெலியத்த ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ரயிலொன்றை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: