சங்கானையில் கேரளாக் கஞ்சாவுடன் இருவர் கைது !

Wednesday, September 6th, 2017

 

யாழ். சங்கானைப் பகுதியில் கேரளாக் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை(05) காலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய  மேற்படி பகுதியில்  திடீர் சோதனை நடத்தியதில் இரண்டு கிலோ 650 கிராம் நிறையுடைய கஞ்சாப் பொதிகளைக் கைப்பற்றியுள்ளதுடன் இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரையும் விசேட அதிரடிப்படையினர் மானிப்பாய்ப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைதான சந்தேகநபர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: