கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கடும் உடல் உழைப்பில் ஈடுபடக்கூடாது – மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை!

Tuesday, September 7th, 2021

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கடும் உடல் உழைப்பில் ஈடுபடக்கூடாது என்பதுடன் உடலை வருத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது அல்லது உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அவர்கள் சில வாரங்கள் எச்சரிக்கையுடன் இருந்த பின்னரே மீண்டும் தங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் மருத்துவநிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பெருமளவானவர்கள் அல்பா அல்லது டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர்கள் இதிலிருந்து மீண்டவர்கள் நீண்டகால பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அசாதாரண சோர்வு, கவனம் செலுத்துவதில் சிரமம், உடல் வலிகள் குறிப்பாக மூட்டுவலி ஆர்வமின்மை போன்ற அறிகுறிகளை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோன நோயாளிகளை சமூகம் நடத்தும் விதம் காரணமாக சில நோயாளிகள் மன அழுத்தத்திற்கு உள்ளாககூடும் எனவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அறிகுறிகள் மூன்றுமுதல் ஐந்து வாரத்திற்கு தொடரக்கூடும் எனவும் மருத்துவநிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் உடலை வருத்தும் நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும், என ஆலோசனை வழங்கியுள்ள மருத்துவர்கள் அதேவேளை குருதி உறைவு போன்றவை காரணமாக முழுமையாக படுக்கையில் ஓய்வில் இருக்க வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். நோயாளிகள் கொரோனாவிலிருந்து மீளும்போது அவர்களது நுரையீரல் இறுக்கமானதாகிவிடுகின்றது இதனால் சுவாசிப்பதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன எனவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


வடக்கு மாகாண சபையே முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை வேண்டுமென்று தடுக்கிறது - M.P.சுமந்திரன்!
யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய்த் தொற்றிலிருந்து மாணவர்களைப்  பாதுகாக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்...
தடை செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தால் கைது நடவடிக்கை தொடரும் - அமைச்சர் சரத் வீரசேகர எச...