இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக பீ.பி.எஸ்.சி. நோனிஸ் நியமனம்!
Tuesday, July 26th, 2022இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக பீ.பி.எஸ்.சி. நோனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கை சுங்கத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள அவர், முன்னதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக செயற்பட்டுவந்தார்.
இதேவேளை, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக, டீ.ஆர்.எஸ். ஹப்புஆரச்சியும், திறைசேரியின் பிரதி செயலாளராக டபிள்யூ.ஏ.சத்குமாரவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
BPL இல் பங்கேற்கும் வீரர்களுக்கு எச்சரிக்கை ?
போக்குவரத்து விதி தொடர்பில் மக்களிடம் கருத்துக் கோருகிறது போக்குவரத்து அமைச்சு!
தேர்தல் நடத்தும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கே - பிரதீபா மஹாநாமஹேவா!
|
|