அதி வேக நெடுஞ்சாலை போக்குவரத்துக்களையும் மட்டுப்படுத்த நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Thursday, October 29th, 2020

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அமைய அதி வேக நெடுஞ்சாலையினூடான போக்குவரத்துக்களையும் மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலையினூடான போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய சேவைகளை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்கவோ, அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கையினை தீவிரப்படுத்துவதற்காக மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் பகுதியில் விசேட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேல் மாகாணம் மாத்திரமின்றி ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மக்கள் ஒன்று கூடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று அதிகாலை 6 மணிமுதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைத்து வாகனங்களையும் விசேட சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ்  ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: