சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு பணி நீடிப்பு!

Monday, March 29th, 2021

சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு பணி நீடிப்பை வழங்குவது குறித்து அரசாங்கத்தின் பிரதானிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா எதிர்வரும் மே மாதம் ஓய்வுபெறவுள்ளார். எனினும் அவரது திறமையான சேவையை கவனத்தில் கொண்டு அவருக்கு பணி நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக பேசப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் சம்பந்தப்பட்டவர்களை அண்மையில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தமை இந்த பணி நீடிப்பை வழங்க பிரதான காரணியாக அமைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Related posts:


US - AID நிதி உதவிகளின் கீழ் பல்வேறு காரணங்களால் செயலற்றுக் கிடக்கும் திட்டங்களை கண்டறிந்து விரைவுபட...
நெருக்கடியான சூழல்களின்போது அனைவரும் தியாகங்களை செய்ய நேரிடும் - அரச ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் ப...
ஸ்ரீ லங்கன் விமான சேவை புதிதாக ஏ - 320 ரக விமானம் ஒன்றை மலேஷியாவிடம் இருந்து குத்தகை அடிப்படையில் கொ...