அதிநவீன புகையிரதங்களை கொள்வனவு !
Thursday, November 3rd, 2016
இந்தியாவிடம் இருந்து கடனடிப்படையில் டீசல் சக்தியில் இயங்கும் குளிரூட்டப்பட்ட 6 புகையிரதங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை ரயில்வே திணைக்களத்திற்காக குளிரூட்டப்பட்ட பயணிகள் ரயில் பெட்டிகளை கொண்ட ஆறு ரயில்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கான ஒப்பந்தம், அமைச்சரவையினால் நியமிக்கப்படும் கலந்துரையாடல் இணைப்பு குழு வழங்கும் பரிந்துரைக்கமைய தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
ஏ9 வீதியில் விபத்து: கணவனும் மனைவியும் பலி!
தேர்தலை ஒத்திவைக்குமாறு IMF பரிந்துரை செய்யவில்லை - வரிச் சீர்திருத்தம் மிக அவசியம் - சர்வதேச நாணயந...
கச்சதீவு அரசியல் பிரசார் மேடை அல்ல - இரு நாடுகளின் இணக்கப்பாட்டுடன் இலங்கைக்கு சொந்தமாக வழங்கப்பட்டத...
|
|
|


