ஏ9 வீதியில் விபத்து: கணவனும் மனைவியும் பலி!

Monday, July 25th, 2016


ஏ9 பாதையில் கொக்காவில் பகுதியில் நேற்று மாலை  சிறியரக பேருந்தும்   மோட்டார் சைக்கிளும் விபத்திற்குள்ளானதில்  கணவனும் மனைவியும் பலியாகியுள்ள அதே வேளை    குழந்தை கடும் காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாநோக்கி   சென்றுகொண்டிருந்த  மோட்டார்சைக்கிலும்   கொழும்பிலிருந்து  யாழ்நோக்கிச்   சென்றுகொண்டிருந்த சிறியரக  பேருந்து  ஒன்றும்  நேருக்கு   நேர்  மோதுண்டதிலையே இவ்விருவரும்  பலியாகியுள்ளனர்.    அத்துடன்    ஒன்றரை  வயது  மதிக்கத்தக்க  குழந்தை பலத்த  காயங்களுடன்   கிளிநொச்சி பொது  வைத்தியசாலை  அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிறியரக  பேருந்தின்  சாரதி   உறங்கியதால்      கட்டுப்பாட்டை  இழந்தமையே எதிரே  வந்த  மோட்டார்  சைக்கிளில்  மோதியதால் இவ்  விபத்து  இடம்பெற்றுள்ளதாக  மாங்குளம்  பொலிசார்  தெரிவித்துள்ளனர்.

பேருந்தின்  சாரதி   விபத்து  நடந்த  இடத்தில்  இருந்து  தப்பிச்  சென்று  கிளிநொச்சி பொலிஸ்  நிலையத்தில் சரணடைந்ததனை  அடுத்து   குறித்த  சாரதியை  கிளிநொச்சி  பொலிசார்   மாங்குளம்  பொலிசாரிடம்  கையளித்துள்ளதாகவும் விபத்தில்  இறந்தவர்கள்  வவுனியாவைச்  சேர்ந்த   24  வயதான அல்பட்   ஜெயக்குமார்  மற்றும்   யாழ்ப்பாணத்தை  சேர்ந்த  அவரது  மனைவியான 23   வயதான பிரஷாந்தினி   என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

post-265

index

Related posts: