அதிக வெப்பநிலை – இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு தீவிர எச்சரிக்கை!
Thursday, April 1st, 2021வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும்.. வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த 4 மாவட்டங்கள் உள்ளடக்கம்..
இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் தீவிர எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 4 மாவட்டங்கள் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது.
குறித்த மாவட்டங்களில் வெப்பநிலை 32 பாகை செல்சியஸில் இருந்து 41 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும், பொதுமக்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள செய்தி!
இலங்கை 6.5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் – நிபுணர்கள் கருத்த...
சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள பொருளாதார இலக்குகளை வெற்றிகொள்வோம் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம...
|
|