அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் கல்லாறு பகுதியில் சந்தேக நபர் கைது!
Monday, February 20th, 2023
களியாட்ட நிகழ்வில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று களியாட்ட நிகழ்வில் இந்த சம்பவம் இடமபெற்றது.
கற்றல் நடவடிக்கை மற்றும் நோயாளருக்கு இடையூறு ஏற்படக்கூடிய வகையில் ஒலிபெருக்கியை ஒலிக்ச் செய்த குற்றச்சாட்டில் ஒலிபெருக்கியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் ஒலிபெருக்கிச் சாதன பொருட்கள் அனைத்தும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வித்தியா கொலை வழக்கு: யாழ். மேல் நீதிமன்றம் விடுத்துள்ள முக்கிய உத்தரவு!
‘பெண்டோரா’ சம்பவத்துடன் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை!
இலங்கையில் மீண்டும் அறிமுகமாகும் பண்டமாற்றுச் சேவை - கைகோர்க்கும் உலகநாடு!
|
|
|


