அலுக்கோசு பதவிக்காக இரண்டுபேர் தெரிவு!

Sunday, June 30th, 2019

இலங்கையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுக்கோசு பதவிக்காக இரண்டுபேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை பெயர்களை திணைக்களம் வெளியிடவில்லை. தற்போது அவர்கள் திணைக்களத்தின் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விநியோக குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Related posts: