அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு!

நேற்றையதினம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் என கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நேற்றையதினம் 57 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.
அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 49 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 33 பேரும் திருகோணமலையில் 20 பேரும் யாழ்ப்பாணத்தில் 15 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 14 பேரும் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர்
அத்துடன் கம்பஹாவில் 22 பேருக்கும் களுத்துறையில் 11 பேருக்கும் கண்டியில் 7 பேருக்கும் மாத்தறையில் 10 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானதாக கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விசா இன்றி தங்கியிருப்பவர்களுக்கு 500 அமெரிக்க டொலர் அபராதம்!
பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் குடிப்போருக்கு ஆபத்து !
செயன்முறை பரீட்சைகளில் பங்குக்கொள்ள முடியாதோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு - பரீட்சைகள் ஆணையாளர் அறிவி...
|
|