அடுத்த வாரம்முதல் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!
Saturday, August 28th, 2021அடுத்த வாரம்முதல் சீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சீனியின் விலையை குறைக்க முடியாது என சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்திருந்தார்.
மேலும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்க அவசியமான சீனி மாத்திரமே கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போதைய நிலையில், சந்தை நடவடிக்கையின் அடிப்படையில், சீனியின் விலையை உடனடியாக குறைக்க முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
எனினும், அடுத்துவரும் மூன்று வாரங்களில் சீனியின் விலையை 190 ரூபா, 180 ரூபா என்ற அளவுக்கு குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தடுத்து வைக்கப்பட்ட கப்பல் சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவு!
வவுனியாவில் அதிகளவு ஆசிரிய வெற்றிடங்கள்!
சுபீட்சத்தின் நோக்குக்காக அரசுடன் ஒன்றிணையுங்கள் - அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ !
|
|