அடுத்த வருடம் சுங்க கட்டளைச் சட்டம் நாடாளுமன்றில்!
Thursday, September 29th, 2016
அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பத்தில் சுங்க கட்டளைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் பொருட்டு அடி மட்ட மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரவி கருணாநாயக்க இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
நாட்டில் அடுத்த சில வாரங்களுக்குள் டெங்கு நோயாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் - தேசிய டெங்கு கட்டுப்...
திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
நியூயோர்க் சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில் - நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது தொடர்பில் உரை!
|
|
|


