அடுத்த இரண்டு வாரங்களில் தடை செய்யப்படும் பொருட்கள் – அமைச்சர் நசீர் அஹமட் அறிவிப்பு!
Monday, August 7th, 2023
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் கரண்டிகள், முள்கரண்டிகள், தயிர்/ஐஸ்கிரீம் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள், மற்றும் பிளாஸ்டிக் இடியப்பத் தட்டுகள் ஆகியவை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடைசெய்யப்படும் என்றும் அமைச்சர் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) ஆனது நாட்டின் காற்றின் தரப் பாதுகாப்பு நிலையை அறிக்கை அளிப்பதற்கான அவசரகால பதில் செயல் திட்டம் ஒன்றை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் மேலும், சுற்றாடல் அமைச்சு, மின்சாரம் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துளளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நிலைமைகளை ஊடகங்கள் புரிந்தகொள்ள வேண்டும் - பிரதமர்!
விரைவில் புதிய நீர்ப்பாசனக் கொள்கை – விஜயமுனி சொய்சா!
மழையுடனான வானிலை - தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
|
|
|


