FCID 50 பேருக்கு அழைப்பு!

Thursday, August 11th, 2016

நிதி முறைக்கேடு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய அதிகாரிகள் 50 பேரை பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (11) அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கடந்த அராசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக குறித்த அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளர்.

ஜனாதிபதி செயலகம், சுற்றுலா துறை, சுற்றுலாதுறை அமைச்சு, பொறியியலாளர் அலுவலகம், ஊழியர் சேமலாப நிதியம், மின்சார சபை, கால்பந்து சம்மேளனம், மகநெகும மற்றும் சீ.எஸ்.என் தொலைக்காட்சி ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளே வாக்குமூலமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: