32 வியாபார நிலையங்களுக்கு எதிராக வழக்கு!
Monday, April 30th, 2018
வவுனியா மாவட்டத்தில் உள்ள 32 வியாபார நிலையங்களுக்கு எதிராக மாவட்ட பொதுசுகாதார அதிகாரிகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் 19 உணவகங்களும், 6 அத்தியாவசிய பொருள் அங்காடிகளும், 4 மருந்தகங்களும், 3 சிறப்பு அங்காடிகளும் உள்ளடங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்குகள் பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கும் வகையில் உணவு உற்பத்தி செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, களஞ்சியங்களில் பழுதடைந்தபண்டங்களுடன் வியாபார பொருட்களை களஞ்சியப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யாழ்ப்பாண பொது நூலகத்துக்கு கடந்த வருடம் அதிக வாசகர்கள்!
இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா ஒத்துழைக்கும் - இந்திய நிதியமைச்சர் அறிவிப்...
நாட்டிற்கு இயங்குநிலையில் உள்ள மாற்றங்களிற்கு உட்படுத்தக்கூடிய வலுவான பாதுகாப்பு கொள்கை அவசியம் - பா...
|
|