300 எக்கர் நிலப்பரப்பில் புதிதாக நெற்செய்கை!

Friday, October 26th, 2018

அண்மையில் விடுவிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வெற்றிலைக்கேணி, நித்தியவெட்டை ஆகிய இடங்களில் உள்ள வயல்கள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தன.

இவ்வாறு தரிசு நிலங்களாக காணப்பட்ட இப் பிரதேசத்தில் வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகம் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியுடன் மேற்குறிப்பிட்ட வயல்களை துப்பரவு செய்து உரியவர்களிடம் கையளித்தது.

இதனையடுத்து இந்த வருடம் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையாளர்கள் புதிதாக நெற்செய்கையை மேற்கொண்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குடத்தனை, மருதங்கேணி, வததிராயன், போக்கறுப்பு போன்ற பிரதேசங்களிலும் காலபோக நெற்செய்கை மேறகொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: